Tuesday, 27 October 2015

இந்து நடுநிலைப்பள்ளி, எனது படம் எண்பதுகளின் தொடக்கம்.

செட்டிகுளம் இந்துநடுநிலைப் பள்ளி, திருநெல்வேலி மாவட்டம். மேல்வரிசையில்
 நான்காவதாக நான் நிற்கிறேன். இது என்னோட வகுப்பு புகைப்படம் அல்ல.
எனது வகுப்பு புகைப்படம் எடுக்கும் போது நான் இல்லை என்று நினைக்கிறேன்.
வேறு வகுப்பில் வைத்து எடுத்துவிட்டார்கள். இவர்கள் எனக்கு ஜூனியர்களாகவும்
சீனியர்களாகவும் இருந்தவர்கள். இரண்டாம் வகுப்பில் சுரண்டை வாத்தியாரிடம்
கொட்டுக் கம்பு என்னும் மூங்கில் கழியால் மண்டையில் அடிவாங்கிவிட்டு மூன்று
வருடங்கள் பள்ளிக்குப் போகாமல் மாடுமேய்க்கப் போனதினால் இவர்கள் எனக்குச்
சீனியர்களும் ஆவார்கள். இரண்டாம் வகுப்பில் என்னோடு படித்த ஆதிலிங்கம்,
முருகேசன் (பட்டேல் ஆசிரியர் மகன்), மலர்விழி, திருமணி, பாலசரஸ்வதி  ஆகிய
யாரும் இப்படத்தில் இல்லை. அப்படியானால் இது என்னுடைய வகுப்புப் படம்
இல்லைதானே. (படம் உதவி: பாலசுந்தரக் கண்ணன்.)

No comments:

Post a Comment