மொழி
எனும் விளையாட்டு
கி.நாச்சிமுத்து
வழி
நடந்த களைப்பிலே மரத்தடியிலே
நின்று கொண்டு ஒளவைப்பாட்டி
மரக் கிளையி-
லிருந்தபடி
நாவல் பழம் பறித்துத்
தின்றுகொண்டிருந்த ஆடுமேய்க்கும்
சிறுவனிடம் "எனக்கும்
சில நாவல் பழங்கள் பறித்துப்
போடேன்"
என்று
கேட்கிறாள்.
"அவனோ
சுட்ட பழம் வேண்டுமா சுடாத
பழம் வேண்டுமா?"
என்று
கேட்கிறான்.
நாவல்
பழத்திலே சுட்டதும் சுடாததும்
உண்டா?தமிழ்
முழுதறிந்த ஔவையோ திகைத்து
நிற்கிறாள்.
தடுமாறுகிறாள்.
"என்
தமிழறிவு இவ்வளவுதானா"
என்று
வெட்கமுறுகிறாள்.
ஒளைவையின்
தமிழறிவைச் சோதித்தவன் வேறு
யாருமல்லன்,
இடைச்
சிறுவன் வடிவில் தோன்றிய
தமிழ் முருகன்தான் என்றறிந்த
மூதாட்டி தன் அறிவின் சிறுமையையும்
தமிழின் ஆழத்தையும் இளமையின்
சிறப்பையும் குறும்பையும்
இறைவனின் பெருமையையும்
உணர்ந்து இன்புற்றுப்
பாடுகிறாள்.
இந்தக்
கதையைக் காலங்காலமாகக் கேட்டு
வரும் தமிழர்கள் அக்கதையில்
மனதைப் பறிகொடுத்துவருகிறார்கள்.
இந்தக்
கதை பல முக்கியமான கருத்துக்களை
நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது.
அதில்
ஒன்று தமிழின் பெருமை.
அதுவும்
புலவர்களிடமுள்ள தமிழல்ல.சாதாரணத்
தமிழன் பேசுகிற தமிழ்.
இரண்டாவது
இளமையும் குறும்பும் கலந்த
குழந்தையின் மொழி விளையாட்டு.
இங்கே
மொழி என்பது ஆற்றல் மிக்க
விளையாட்டுக்குக் களம்
அமைக்கிறது.
மொழியே
விளையாட்டாகிறது.
தமிழிலேயே
புலமையின் அடையாளமாக விளங்கிய
புலமைப் பெருமாட்டியே கற்றுக்
கொள்ளவேண்டிய ஆழங்கள் நமக்குத்
தெரிகின்றன.
மொழியின்
ஆற்றல் நமக்குப் புலப்படுகின்றது.
இவற்றைப்
பற்றியெல்லாம் ஆராய்ச்சி
செய்வதற்கு முன் முருகன்
கேட்ட கேள்வியில் அடங்கியிருந்த
மொழி ஆழம் என்ன?
அதை
எப்படி இலக்கணம் அல்லது இன்றைய
மொழியியல் கொண்டு விளக்குவது?
சுட்ட
பழம் சுடாத பழம் இரண்டும்
பெயரெச்சத் தொடர்கள்.
சுடுதல்
என்றால் அது செயப்படுபொருள்
குன்றியவினையாக வரும்போது
ஒரு பொருள் வெப்பமாக இருப்பதை-
காய்வதை
உணர்த்தும்.
எ.டு,
உடம்பு
காய்ச்சலால் சுடுகிறது.
அதுவே
செயப்படுபொருள் குன்றா வினையாக
வரும்போது இன்னொருவருக்கு
வெப்பம் ஊட்டுவதை காயச்
செய்வதை எரித்தலை உணர்த்தும்.
எ.டு.அடுப்பில்
வைத்த பாத்திரம் சுடுகிறது,கிழங்கைச்
சுட்டும் தின்னலாம்.
இன்னொரு
பொருள்-
நெருப்பைக்
கொண்டு அவித்தல் அல்லது
பொரித்தல்.
எ.டு.அம்மா
இட்லி சுட்டாள்.
பாட்டி
வடை சுட்டாள்.
சுட்ட
கிழங்கு சூடாக இருந்தால் ஊதி
ஊதிச் சாப்பிடு.
பிற்காலத்தில்
தோன்றிய இன்னொரு பொருள்
பீரங்கி துப்பாக்கி
முதலியவற்றிலிருந்து குண்டுகளை
வெடிக்கச் செய்தல்.
அண்மைக்
காலத்தில் சென்னை போன்ற வட்டார
வழக்கிலிருந்து பொது வழக்குக்கு
வந்துள்ளது திருடுதல் என்ற
பொருள்.
1992 இல்
வந்த க்ரியா அகராதியில் கூட
இந்தப் பொருள் ஏறவில்லை.
தமிழில்
சொற்பொருள் மாற்றம் யாருக்கும்
தெரியாமல் எப்படி வந்து
சேருகிறது என்பது வியப்புத்தான்.
இங்கே
சுட்ட பழம் சுடாத பழம் என்பதில்
பொருளால் ஏற்பட்ட மயக்கம்
(semantic
ambiguity), வாக்கிய
மயக்கம் (syntactic
ambiguity), மொழிப்பயன்பாட்டுச்
சூழல் மயக்கம் (pragmatic
ambiguity) போன்றவற்றைக்
காண்கிறோம்.
இவற்றை
விளக்கலாம்.
பழம்
சுடுகிறது உடம்பு சுடுகிறது
என்பது போன்ற செயப்படுபொருள்
குன்றியவினைப் பொருளில்
வருகிறதா?பாத்திரம்
கையைச் சுடுகிறது என்பது
போன்ற செயப்படுபொருள்குன்றா
வினைப்பொருளில் வருகிறதா?
அல்லது
பாட்டி சுட்ட வடை என்பது
போன்று சமைத்துப் பொரித்த
பொருளா?இத்தனைக்கும்
காரணம் மண்ணில் விழுந்த நாவல்
பழத்தில் ஒட்டியுள்ள மண்ணை
ஊதி ஊதி அகற்றி உண்கிற போது
அச் செயல் நடைபெறும் சூழல்
சுட்ட பொருளைத் தின்பதைப்போன்ற
மயக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது
சொற்பொருளுக்கு மேலே உள்ள
மொழிப்பயன்பாட்டுச் சூழலில்
தோன்றுகிற மயக்கம்.
இங்கே
இதைச் சுடு என்ற பல பொருள்
ஒரு சொல் தரும் மயக்கம்
(ambiguity
due to poly semy). இன்னொன்று
சுட்ட என்ற பெயரெச்சம் எழுவாயாக
அமைகிறதா?
செயப்படுபொருளாக
அமைகிறதா என்ற மயக்கம்.
இன்னொன்று
சுடாததாகிய பழம் என்ற
இருபெயரொட்டாக வரும்போது
ஏற்படும் மயக்கம்.
இவை
எல்லாம் இலக்கண ஒப்புருச்
சொல் மயக்கம் (ambiguity
due to grammatical homonymy). பழம்
சுட்டது என்று சொல்லும்போது
பழம் எழுவாய்.
அதிலிருந்து
வருகிற பெயரெச்சம் சுட்ட
பழம் என்பது.
எனவே
இந்தப் பெயரெச்சம் எழுவாய்ப்
பொருளில் வருகிறது.
சுட்ட
வடை என்பதில் பாட்டியால்
சுடப்பட்ட வடை அதாவது பாட்டி
வடையைச் சுட்டாள் என்ற
வாக்கியத்தில் செயப்படுபொருளாக
வரும் வடை போலச் சுட்ட பழம்
அதாவது சுடப்பட்ட பழம் (யாரோ
பழத்தைச் சுட்டார்கள்)
என்ற
செயப்படு பொருள் பொருளைத்
தரும்போது பழத்தை யாராவது
சுடுவார்களா?
என்ற
மயக்கம் ஏற்டுகிறது.
சுடாததாகிய
பழமும் இருக்கலாம்தானே.
அது
சுடாத பழம்.
இது
விளையாட்டாகிறது.
மொழியின்
ஆற்றல்களில் இதன் விளையாட்டுப்
பண்பும் ஒன்று.
மொழியை
ஆளத் தொடங்குகிற குழந்தைகள்
இதைக் கவனிக்கிறார்கள்.
அதை
விளையாட்டாக மாற்றுகிறார்கள்.
எனவே
இத்தகைய விளையாட்டுக்கு இடம்
கொடுக்கும் மொழிக்களங்களைத்
திரட்டி மொழி கற்பித்தலுக்குப்
பயன்படுத்தலாம்.
அதாவது
மொழிக்கல்வியை விளையாட்டாகக்
கற்பிக்கலாம்.
சிலேடை
என்றும் யமகம் திரிபு மடக்கு
என்ற சொல்லணி வகைகளாகவும்
பல முறைகளில் இது இலக்கிய
மொழியில் காணப்படுகிறது.
தொல்காப்பியரே
பிசி என்ற விடுகதையை இலக்கிய
வகையாகக் குறிப்பிடுவார்
(1421).
தண்டியலங்காரம்
(98)
கோமூத்திரி,
கூடசதுக்கம்,
மாலை
மாற்று,
எழுத்து
வருத்தனம்,
காகபந்தம்,
வினாவுத்தரம்,
காதைகரப்பு,
கரந்துறைசெய்யுள்,
சக்கரம்,
சுழிகுளம்,
சருப்பதோபத்திரம்,
அக்கரச்சுதகம்
போன்ற 12
மொழிவிளையாட்டு
வகைகளைக் குறிப்பிடும்.
இதையெல்லாம்
பயன்படுத்தி மொழியின் ஆற்றலை
விளையாட்டாக மாற்றுவதன்
நோக்கம் ஒன்று,
குழந்தைகளுக்கு
மொழி விளையாட்டில் ஆர்வம்
ஏற்படுத்தி மொழிக் கூறுகளைக்
கற்பிப்பது
இன்னொன்று.
இதில்
அமைந்திருக்கும் இலக்கண
மொழியியல் நுட்பங்களை உயர்
நிலை மாணவர்களுக்குக்
கற்பிப்பது.
இத்தகைய
மொழி விளையாட்டுக்களைப்
புதிர் வகைகளில் ஒன்று எனலாம்.
இவற்றில்
விடுகதை இருக்கும்.
எ.டு,
அண்ணனுக்கு
எட்டாது தம்பிக்கு எட்டும்.
அது
உதடு (தம்பி
என்று உச்சரிக்கும்போது கீழ்
உதட்டுக்கு மேல் உதடு எட்டும்.
அண்ணனுக்கு
எட்டாது.
இங்கு
சொல் தன்னையும் உணர்த்தும்
பொருளையும் உணர்த்தும் என்ற
தொல்காப்பியர் கூற்றின் படி
(சொல்.பெயர்.2)
சொல்லும்
பொருளும் மயங்குகிற மயக்கம்).
இந்தப்
புதிரும் ஒலிகள் உச்சரிக்கும்
முறையைச் சொல்லித்தரும்
அருமையான விடுகதைப் புதிர்தான்.
இன்னொரு
வகை சிலேடை.
சிலேடை
என்றால் இரட்டுற மொழிதல்.
அது
அடிப்படையில் இரண்டு வகைப்படும்.
இத்தகைய
சிலேடை என்றால் நமக்கெல்லாம்
காளமேகப் புலவர் நினைவுக்கு
வருவார்.
அவர்
இத்தகைய சிலேடைகளை உதிர்ப்பதிலே
வல்லவர்.
ஒருவரை
அவர் அறிவில்லாதவன் எனத்
திட்டவும் செய்வார்.
அச்சொல்லையே
பிரித்து நீ அறிவில் ஆதவன்
(சூரியன்)
என்று
பிரிமொழிச் சிலேடையாக்கி
மகிழவும் வைப்பார்.
அது
போலப் பலபொருள்களுக்கும்
தொடர்பு ஏற்படுத்திச் சிலேடையும்
பாடுவார்.
இங்கே
பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும்
சிலேடை எப்படிப் பாடுகிறார்
என்று பாருங்கள்.
நஞ்சிருக்கும்
தோலுரிக்கும் நாதர்முடி
மேலிருக்கும்
வெஞ்சினத்தில்
பல்பட்டால் மீளாது -
விஞ்சுமலர்த்
தேம்பாயும்
சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும்
வாழைப் பழம்.
பாம்பு
நஞ்சு பெற்றிருக்கும்,
தோல்
உரிக்கும்,
நாதர்
முடி அதாவது சிவன் தலையில்
இருக்கும்,
அதன்
பல் கோபத்தில் பட்டால் உயிர்
மீளாது.
வாழைப்பழம்
நஞ்சு இருக்கும் -
நைந்து
கனிவாக இருக்கும்,
தோல்
உரிபடும்,
வாழைப்பழம்
வாழைமரத்தில் குலையில்
மேற்பகுதியில் இருக்கும்.
பல்லில்
கடிபட்டால் பழம் மீளாது.
(நஞ்சு
பெயர்.
விடம்
என்ற பொருள்.
நஞ்சு
வினையெச்சம்.
நைந்து
இது பிரிமொழி.
இலக்கண
ஒப்புருச் சொல் (Grammatical
Homonymy). தோல்
பலபொருள் ஒரு சொல்.
நாதர்முடி
மேலிருக்கும்.
வெஞ்சினத்தில்
பல்பட்டால் என்ற இரண்டும்
மொழிப் பயன்பாட்டு ஒற்றுமை.
இவ்வாறு
அக்காலத்தில் மொழி படிக்கிற
மாணவர்களிடம் சிலேடை பாடச்
சொல்லி அவர்கள் மொழித்திறனைச்
சோதிப்பதுண்டு.
பாரதி
சின்னப் பயல் என்ற இறுதி
அமைத்து வெண்பா பாடச் சொன்ன
காந்திமதி நாத பிள்ளைக்குக்
காந்திமதி நாதனைப் பார் அதி
சின்னப் பயல் என்று பாரதி
பாடி வாயடக்கச் செய்த பாரதியின்
இளங்குறும்பு நம்மை மகிழ்விக்கிறது
இல்லையா?
செம்மொழிச்
சிலேடை என்பது சொல்லை
விட்டிசைப்பதால் ஏற்படும்
பொருள் வேறுபாடு வேறு வேறு
வகை இலக்கண அமைப்புடையவை.
பிரிபடும்போது
வேறு பொருள்படும்.
இவை
இலக்கண ஒப்புருவம் பெற்றவை.
இவ்வாறு
சொற்பொருள் ஆராய்ச்சி செய்து
உயர்நிலை மாணவர்க்கு
இலக்கணத்தையும் மொழியியலையும்
கற்பிக்கலாம்.
இத்தகைய
எடுத்துக்காட்டுகளைத்
தமிழறிவாள் கதை முதலியவற்றில்
காணலாம்.
இது
போன்ற உண்மையான வரலாறுகளை
உ.வே.சா.
போன்றோர்
வாழ்வில் பார்க்கலாம்.
அவர்
மாணவர் கி.வா.ஜ.
அவர்களின்
சிலேடைகள் புகழ் பெற்றவை.
மரியாதை
இராமன் கதை போன்றவற்றிலும்
கடி போன்ற இம்மொழி விளையாட்டுக்கள்
உண்டு.
ஒரு
செல்வர் தான் இறக்கும் முன்
தன் மகன் குழந்தையாக இருப்பதைப்
பார்த்துத் தன் நண்பன் ஒருவனிடம்
ஆயிரம் வராகன்களை ஒப்படைத்து
என் மகன் பெரியவனானதும் உனக்கு
விருப்பமானதை அவனுக்குக்
கொடு என்று கூறி இறந்து
விடுகிறார்.
வளர்ந்து
பெரியவனான செல்வர் மகன் வந்து
கேட்கும்போது நண்பர் ஒரு
வராகனை மட்டும் கொடுக்கிறார்.
ஏனெனில்
உன் அப்பா நான் விரும்பியதையே
உனக்குக் கொடுக்கச் சொன்னார்
என்று அமைதி கூறுகிறார்.
ஏமாந்த
அந்தப் பிள்ளை மரியாதை இராமனிடம்
முறையிடுகிறான்.
மரியாதை
இராமன் வழக்கை ஆராய்ந்து 999
வராகன்களை
இளைஞனிடம் இறந்தவர் நண்பர்
வழங்க வேண்டும் என்று
தீர்ப்பளிக்கிறார்.
இறந்தவர்
சொல்படிதானே நான் நடந்து
கொண்டேன் என்று அவர் விளக்கம்
கேட்கிறார்.
இறந்தவர்
சொல்லிய படி செய்வதாக இருந்தால்
உங்களுக்குப் பிடித்த அந்த
999
தான்
கொடுக்க வேண்டும்.
எனவே
தீர்ப்பு சரியே என்று விளக்கம்
அளிக்கிறான் மரியாதை இராமன்.
இங்கே
உனக்கு விருப்பமானதைக் கொடு
உனக்கு விருப்பமானது உனது
விருப்பம் 999,
எனவே
அதை அவனுக்குக் கொடுப்பதே
முறை என்று விளக்கம் செய்கிறான்
இராமன்.
இங்கே
உனது விருப்பம் என்ற உடைமைப்
பொருள் கொள்ளும்போது அது 999
வராகன்.
உனக்கு
விருப்பமானது உனக்குக்
கொடுக்க விருப்பம் என்று
பொருள் கொண்டால் அது கொடைப்பொருள்.
ஏமாற்ற
நினைத்த நண்பர் கொடைப்பொருள்
கொள்கிறார்.
மரியாதை
இராமன் இறந்தவர் சொல்லியதிலிருந்த
உடமைப் பொருளை இனங்கண்டு
தீர்ப்பளிக்கிறார்.
அவர்
அறிவுத்திறமை அது.
அதன்
இலக்கண விளக்கம்தான் நாம்
மேலே சொன்னது.
இவ்வாறு
உயர்நிலை மாணவர்க்கு இலக்கணம்
கற்பிக்கவும் இவை பயன்படும்.
இதிலே
இன்னொரு உயர்ந்த மொழி ஆற்றலை
வெளிப்படுத்தும் யமகம் திரிபு
மடக்கு போன்றவை உண்டு.
அவை
பிற்காலத்தில் கேலிக்கு
உள்ளாக்கப்பட்டாலும்
அக்காலத்தில் மொழித்திறனை
அறியும் சோதனைகளாக அவை இருந்தன
என்பதை அறிந்து கொண்டால்
அவற்றைத் தூற்ற வேண்டியதில்லை.
விடுகதையிலே
சிலேடை கலந்து வருவது ஒரு
வகை.
அதுதான்
இன்று கடி எனப்படுகிறது.
இதற்கு
ஆங்கில எடுத்துக் காட்டும்
கொடுத்து விளக்கலாம்.
e.g.
Question:
What is black and white and red all over?
Answer: An Embarrassed
zebra.
இது
விடுகதை (ரிடில்).
What is black and white and red(/read)
all over?” “a newspaper"/ இதைக்
கடி எனலாம் (conundrum).
அதாவது
விடுகதையில்
சிலேடையையும் சேர்த்தமைப்பது.
Red(read)
சிவப்பு,
படிக்கப்படுவது
என்ற இருபொருளால் விளைந்த
கடி.
இன்றைய
மொழியிலே கடி சிரிப்பு என்ற
ஒரு வகை குழந்தைகள் இளைஞர்கள்
இடையே மிக செல்வாக்காக வழங்கி
வருகிறது.
இது
குழந்தைகள் மொழியிலே விளையாடி
அதைக் கொண்டாடுவது கண்டு
நாம் எல்லாரும் அவர்களோடு
சேர்ந்து சிரிக்கிறோம்.
தேளுக்கும்
முடிக்கும் என்ன ஒற்றுமை?
இரண்டுமே
கொட்டும்
இங்கே
கொட்டும் என்பது குத்தும்
(கடிக்கும்)
என்றும்
உதிரும் என்று பொருள்படும்
பல பொருள் ஒப்புருச் சொல்லால்
(homonymy)
ஏற்படும்
சிலேடைப் பொருள்.
(இதைத்
தேள் கொட்டினா வலிக்கும்
முடி கொட்டினா வலிக்குமா?
என்றும்
மாற்றலாம்.)
இந்தக்
கடியில் மொழியின் பல அமைப்புக்களை
ஒட்டி எழலாம்.
அவற்றில்
ஓரிரண்டை மட்டும் இங்கு
குறிப்பிடுவோம்.
1.கல்லாவில்
இருப்பவர் :சாப்பிட்ட
பில்லுக்குக் காசு கொடுக்காமல்
போறீங்களே சார்?
சாப்பிட
வந்தவர் :
நான்
தோசை தானே சாப்பிட்.டேன்.
பில்
எல்லாம் சாப்பிடலே
(துரை.
இராமகிருஷ்ணன்,
எரகுடி,
தினமணிக்
கதிர்.
04.09.2011).
இது
பெயரெச்சம் தரும் இலக்கண
ஒப்புருச் சொல் தரும் மயக்கம்.
சாப்பிட்ட
பில் என்பதில் பில் செயப்படுபொருள்,
சாப்பிட்டதற்கு
பில் என்ற நான்காம் வேற்றுமை
தகவுப் பொருள் என்ற இரண்டிலும்
மயங்கி வந்து கடியாகிறது.
2.யுவராஜ்
:டேய்
பனியில் நிக்காதடா சளி
புடிச்சுக்கும்.
சந்தோஷ்
:நல்லாப்
பாருடா….நான்
பனியிலே நிக்கலை,காலில்தான்
நிக்கறேன்.
(ஜி.கே.எஸ்.
மூர்த்தி,
கோபி
செட்டிபாளையம்,
தினமணி
சிறுவர் மலர்.
03,09,2011),
இது
வேற்றுமை மயக்கம்.
ஏழாம்
வேற்றுமை மூன்றாம் வேற்றுமைக்
கருவிப்பொருளில் வருவதால்
ஏற்படும் மயக்கம்.
3.பட்டாசுக்
கடைக்குப் போயிருந்தேன்.
வெடிக்காத
பட்டாசையெல்லாம் கடைக்காரன்
என் தலையில் கட்டிட்டான்.
நல்ல
வேளை வெடிக்கிற பட்டாசைத்
தலையில் கட்டியிருந்தால்
தலை சிதறி இருக்கும் தப்பிச்சே
போ.
(சு.சதீஸ்குமார்,
இராக்கி
பாளையம்,
தினமணி
சிறுவர் மணி.
1,10,2011).
இது
மரபுத் தொடர்ப் பொருளை
செம்பொருளாகக் கொண்டதால்
ஏற்பட்ட மயக்கம்.
4.மாணவி:
சார்,
நீங்க
செய்யாத தப்புக்கு அடிப்பீங்களா?
ஆசிரியர்:
சே
சே அடிக்கமாட்டேன்
மாணவி:
வீட்டுப்
பாடம் செய்யலை சார்.
ஆசிரியர்
:
???
இது
சுட்ட பழம் சுடாத பழம் போன்றது.
செய்யாத
தப்பு என்பது தப்பைச் செய்யவில்லை
என்ற செயப்படுபொருள் கொண்டு
முடிந்த பெயரெச்சம்.
இது
ஆசிரியர் கொண்ட பொருள்.
இரண்டாவதாக
இதைச் செய்யாததாகிய தப்பு
என்ற இருபெயரொட்டாக வரும்
பெயரெச்சமாகவும் விளக்கலாம்.
(பொய்யா
விளக்குப் போல (குறள்.299).
இது
மாணவி கொண்ட விளக்கம்.
நம்ம
தமிழாசிரியரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
ஏன்?
"இங்க
தமிழாசிரியர் யாருன்னு"
கேட்டதுக்கு
'அடியேன்'னு
சொல்லியிருக்காரு...
அதான்!'-
(வி.அப்ஜித்,
சென்னை
600 45
தினமணி
சிறுவர் மணி 24.09.2011).
இது
விட்டிசையால் ஏற்படும்
பிரிமொழிச் சிலேடை
பேருந்தைப்
பின்னால் தள்ளினால் என்ன
நடக்கும்.
முன்னே
போகும் என்போம் நாம்.
நம்
குறும்புக் குழந்தை பின்
வளைந்து போகும் என்று நம்மை
மடக்கும்போது தமிழ்ச் சொல்லும்
ஆங்கிலச் சொல்லும் கலந்து
வரும் ஒப்புருச்
சொல்லாகி (homonymy)
விடுகிறது.
இத்தகைய
கலப்புக்கடிகள் இன்று பெருகி
வருகின்றன.
இது
இன்று மொழி இருமொழியமாக
மாறுவதன் அடையாளம்.
பழைய
காலத்தில் சிலேடைகளில் வடமொழி
இப்படித்தான் கலந்து வரும்.
மொழி
எப்படி விளையாட்டாகவும்
இருக்கிறது.
ஆற்றலோடும்
ஆழத்தோடும் இருக்கிறது என்பதை
உணரும் நாம் இந்தக் களங்களை
இனங்கண்டு தமிழைச் சுவையோடும்
விருப்போடும் சொல்லிக் கொடுக்க
வேண்டும்;
பரப்ப
வேண்டும்.
மொழிக்
கல்வியில் குழந்தை விளையாட்டுக்கும்
உயர் நிலையில் இலக்கணப்
பயிற்சிக்கும் இதைத்துணையாகப்
பயன்படுத்தவேண்டும்.
1920 களில்தான்
ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப்
புதிர் வழக்கத்திற்கு வந்தது.
தமிழில்
1930
களில்
ஆனந்த விகடன் அதை வளர்த்தது.
அதற்காக
வாசன் தமிழ் அகராதியே
வெளியிட்டார்.
பின்
அது குன்றியது.
இப்போது
மீண்டும் தளிர் விட்டுள்ளது.
ஆனால்
இன்று பல மொழி விளையாட்டுகள்
வழக்கத்திற்கு வந்து விட்டன.
அவை
பற்றி ஆராய பொழுதுபோக்கு
மொழியியல் (Recreational
Linguistics) தோன்றி
வளர்ந்து வருகிறது.
தமிழில்
புதுவை மொழியியல் பண்பாடு
நிறுவனப் பேராசிரியர்
த.பரசுராமன்
சொல்
விளையாட்டு,
சொல்திறன்
விளையாட்டு,
சொற்பயிற்சி
விளையாட்டு,
கவிதை
விளையாட்டு,
வாக்கிய
விளையாட்டு
என்று பல நூல்களை (முத்து
வெளியீடு,
புதுவை)
எழுதி
வெளியிட்டுள்ளார்.
இவர்
நூல்கள் உட்படக் குழந்தைகள்
தமிழ் கற்க உதவும் தளங்கள்
பற்றித் தெரிந்து கொள்ளக்
கீழே கண்ட வலைத்தளத்தைப்
பார்க்கலாம்.
thamizhagam.net.மேலும்
பார்க்க.
Nachimuthu K. 2004,
A Linguistic Interpretation of KaTi Jokes in Tamil,
IJDL.Vol.Vol xxxiii No.2 June pp.169-178.